Tuesday 31 December 2013

திட்டமிடுதலின் இலக்கு வெற்றி

பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் கொற்கை நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ஒரே மூச்சில் வாசித்து விட முடியாது. உரிய காலஅவகாசத்தி்ல் மட்டுமே வாசிக்க முடியும்.

சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர், முறையான முன் திட்டமிடல் இன்றி, வாசிப்பது கடினம். அவ்வளவு பெரிய புத்தகம். ஒரே மூச்சில் வாசித்து முடித்தவர்கள், இதையே வேலையாக செய்தவர்களாக இருக்க முடியும்.  இந்த கொற்கை நாவலை வாசிக்க நான் எடுத்துக் கொண்டது, 22 நாட்கள்.


அலுவலக பணிகளுக்கு இடையே, சிறிய உலாக்களில், இதை வாசித்து முடிக்க முடிந்தது.  மொழிநடை ஈர்த்தது. யாழ்ப்பாண தமிழ் பேச்சு நடையை பழகியவர்களும் நெல்லை குமரி மாவட்ட வாசிகளும், இதை எளிதாக வாசிக்க முடியும். கதைக்களம் இந்த வட்டாரங்களை ஒட்டியது என்பதால், சொற்களில் அநத லயம் தவிர்க்க முடியாதது.
கொற்கையில் விவரிப்பு, காட்சிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனாலும், பல இடங்கள், கடந்த காலத்துக்குள், நிகழ்காலம் நுழைந்து கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்துகிறது. முறையான  பிரதி செம்மையாக்கம் செய்யப்படாததே இதற்கு காரணமாக இருக்கலாம்

துல்லியப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம். நேர்த்தியான விவரிப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நிகழ்வுகள் என, புத்தக பயணிப்பில்  காண முடிந்தது.

வாசித்து முடித்தபின், படைப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

கப்பல் கம்பெனியில் உயர் பொறுப்பில் இருப்பவர். எல்லா விஷயங்களிலும் அவரிடம் திட்டமிடல் இருந்தது. தமிழ் படைப்பாளர்களிடம் காணமுடியாத அல்லது அவர்கள் உதாசீனப்படுத்தும் விஷயம். குரூஸ் எழுதிய இரண்டு படைப்புகளுமே, நீளமானவை. விவரிப்பு, உரையாடல் நிரம்பியவை. காட்சிகளை உள்ளடக்கியவை. இவற்றை உரிய திட்டம் இன்றி பதிவு செய்ய முடியாது. அவரது திட்டமிடுதல், தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்மாதிரி.எனக்க தெரிந்தவரை சுந்தரராமசாமியிடம் இந்த திட்டமிடுதல் உண்டு.

 எங்கள் உரையாடல் கிட்டத்தட்ட அது சார்ந்தே அமைந்திருந்தது. அவரது அலுவலக சந்திப்பு அறையில், கிட்டத்தட்ட மேற்கத்திய பாணியில், தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்பளர்களை மையப்படுத்தியிருந்தது. அவரது வெற்றிக்கு இந்த திட்டமிடல் உதவியுள்ளதாக கணித்தேன். ரைட்டர்ஸ் மேகசீன் என்ற ஆங்கில இதழில், படைப்பு திட்டமிடுதல் பற்றி ஒரு கட்டுரையை, சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதை வாசித்து முடித்ததும், எழுத்தாளர் குரூஸ்தான் நினைவுக்கு வந்தார். தமிழில் சிறந்த படைப்புகள் தோன்ற, திட்டமிடலுக்கு முன்னுரிமை வேண்டும்.

No comments:

Post a Comment