Tuesday 31 December 2013

திட்டமிடுதலின் இலக்கு வெற்றி

பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் கொற்கை நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ஒரே மூச்சில் வாசித்து விட முடியாது. உரிய காலஅவகாசத்தி்ல் மட்டுமே வாசிக்க முடியும்.

சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர், முறையான முன் திட்டமிடல் இன்றி, வாசிப்பது கடினம். அவ்வளவு பெரிய புத்தகம். ஒரே மூச்சில் வாசித்து முடித்தவர்கள், இதையே வேலையாக செய்தவர்களாக இருக்க முடியும்.  இந்த கொற்கை நாவலை வாசிக்க நான் எடுத்துக் கொண்டது, 22 நாட்கள்.