Thursday 14 March 2019

நிலம் பயன் உயிர்ப்பு

ஏழைகளுக்கான நிலப்பகிர்வில் முன்னிலை வகிக்கும் களப்போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். பூமி தான இயக்கத்தில் இணைந்து, இந்தியாவில் ஏராளமான போராட்டங்களை வெற்றியாக்கியவர், தஞ்சை வெண்மணி கொடூர சம்பவத்தை தொடர்ந்து களப்பணி ஆற்றியவர். 90 வயதைக் கடந்தும், அயராது மக்கள் பணி ஆற்றி வருகிறார். அவரது பயன் வாழ்க்கையை, தோழர் மலர்விழி ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை, எடிட் செய்து செம்மையாக்கி இறுதி வடிவம் செய்துள்ளேன்.
புத்தகத்தில் இருந்து...
கூனி குறுகி வேலை செய்தாலும் அரைவயிறு கஞ்சிக்கு தான் கூலி கிடைக்கும். கூலி நெல்லை ஊற வைத்து உலர்த்தி அரைக்க நேரமில்லாமல், ஊற வச்ச உடனே அப்படியே குத்தி, கும்ப வாசனையோடு கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டும். உயிர காப்பாற்றிக்க, மறுநாள் வேலைக்குப் போவார்கள்.
சமயத்தில், கஞ்சிக்கு வெங்காயம், காணப்பயிறு துவையல், வயலில் பிடித்த நண்டு போன்றவை வெஞ்சணமாக இருக்கும். பண்டிகை நாட்களில் எஜமான் வீட்டில் வடித்து போடும் கும்பச்சோறு தான் நெல் சோறு.
இந்த நிலை எல்லாம் ஏதோ இருநூறு, முன்னூறு ஆண்டுகால வாழ்க்கை அல்ல... நம் பாட்டி தாத்தா காலத்தில் ஏறக்குறைய, 50 ஆண்டுகளுக்கு முன் வரை, தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் நிலவிய கொடுமை. உழைத்து வாழ்ந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் நிதர்சன வாழ்வு இது.

No comments:

Post a Comment