வசந்தத்தை வனப்பாக்குகிறது, கதலி மரம். இளம் சிவப்பு – ஊதா கலந்த மென் வண்ணத்தில், கோடையில் பூத்து குலுங்கும். அடர் பச்சை இலைகளைக் கொண்டது. குளிர்காலத்தில் உதிர்க்கும். அடர் நிழல் தரும்.
தாவரவியல் பெயர்: லகர்ஸ்டிரோமியா ஸ்பீசியோஸா –Lagerstroiemia Speciosa. ஆங்கிலத்தில், Giant crepe-myrtle, Queen's crepe-myrtle, Bride of India என்றும், பிலிப்பைன் நாட்டில், பானபா, இலங்கை, சி்ங்களத்தில், முருதா என்றும் அழைக்கின்றனர். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள்.
உயிரின நவீன வகைப்பாட்டியலை உருவாக்கிய இயற்கையியல் அறிஞர் காரேலஸ் லின்னோயஸ் (1707 – 1778) இந்த தாவரத்தை வகைப்படுத்தி பெயரிட்டுள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். சுவீடன் அகாடமியை நிறுவியவர்.
கதலி மரம், தெற்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து, 1200 முதல், 2400 மீட்டர் உயரத்தில் வரை வளரும் இயல்புள்ளது. வெப்ப மண்டலக் காடுகளில், 20 மீட்டர் உயரம் வரை வளரும். இந்தியா, தைவான், பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
ஆண்டின் ஒருமுறை வசந்த காலத்தில் மட்டும் பூத்து குலுங்கும். அப்போது, தேனி, வண்டுகள் உட்பட ஏராளமான உயிரினங்கள் தேன் பருகி சார்ந்து வாழும். பல்லுயிர் பெருகும். இங்கு பதிவிட்டுள்ள படம், சென்னை, நந்தனம், சி.ஐ.டி., காலனியில் எடுத்தது.
இந்த மரத்தை சிறப்பிக்க, இந்திய அரசின் தபால்துறை, ஒரு தபால் வில்லை வெளியிட்டுள்ளது.
மரபு வழி புத்தமார்க்கமான தேரவாத பிரிவில், கதலி மலர் புனிதமாக கருதப்படுகிறது. கேரளாவில் சித்திரை விசு தினத்தில், சரக்கொன்றைக்கு உள்ள முக்கியத்துவம், வங்காள புத்தாண்டில், கதலி மலருக்கு உண்டு. இன்று, ஏப்ரல் 15, வங்காளிகள், அசாமியர், மலையாளிகளுக்கு புத்தாண்டு.
முற்றிய மரத்தடியில், ஜன்னல், கதவு, உழவுக் கருவிகள் செய்யலாம். சில நாடுகளில் படகு செய்வதாக கூறப்படுகிறது.
இலைகளை பயன்படுத்தி, ஜப்பான், தைவான் நாடுகளில் தேனீர் தயாரிக்கின்றனர். இளம் இலைகளை, உணவாக வியட்நாம் நாட்டில் பயன்படுத்துகின்றனர்.
சங்க இலக்கியத்தில், வாழைக்கு கதலி என்று பெயர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவகை வாழை, இப்போதும் கதலி என்றே அழைக்கப்படுகிறது. வழிபாடுகளில் படையலுக்கு பயன்படுகிறது.
தாவரவியல் பெயர்: லகர்ஸ்டிரோமியா ஸ்பீசியோஸா –Lagerstroiemia Speciosa. ஆங்கிலத்தில், Giant crepe-myrtle, Queen's crepe-myrtle, Bride of India என்றும், பிலிப்பைன் நாட்டில், பானபா, இலங்கை, சி்ங்களத்தில், முருதா என்றும் அழைக்கின்றனர். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள்.
உயிரின நவீன வகைப்பாட்டியலை உருவாக்கிய இயற்கையியல் அறிஞர் காரேலஸ் லின்னோயஸ் (1707 – 1778) இந்த தாவரத்தை வகைப்படுத்தி பெயரிட்டுள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். சுவீடன் அகாடமியை நிறுவியவர்.
கதலி மரம், தெற்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து, 1200 முதல், 2400 மீட்டர் உயரத்தில் வரை வளரும் இயல்புள்ளது. வெப்ப மண்டலக் காடுகளில், 20 மீட்டர் உயரம் வரை வளரும். இந்தியா, தைவான், பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
ஆண்டின் ஒருமுறை வசந்த காலத்தில் மட்டும் பூத்து குலுங்கும். அப்போது, தேனி, வண்டுகள் உட்பட ஏராளமான உயிரினங்கள் தேன் பருகி சார்ந்து வாழும். பல்லுயிர் பெருகும். இங்கு பதிவிட்டுள்ள படம், சென்னை, நந்தனம், சி.ஐ.டி., காலனியில் எடுத்தது.
இந்த மரத்தை சிறப்பிக்க, இந்திய அரசின் தபால்துறை, ஒரு தபால் வில்லை வெளியிட்டுள்ளது.
மரபு வழி புத்தமார்க்கமான தேரவாத பிரிவில், கதலி மலர் புனிதமாக கருதப்படுகிறது. கேரளாவில் சித்திரை விசு தினத்தில், சரக்கொன்றைக்கு உள்ள முக்கியத்துவம், வங்காள புத்தாண்டில், கதலி மலருக்கு உண்டு. இன்று, ஏப்ரல் 15, வங்காளிகள், அசாமியர், மலையாளிகளுக்கு புத்தாண்டு.
முற்றிய மரத்தடியில், ஜன்னல், கதவு, உழவுக் கருவிகள் செய்யலாம். சில நாடுகளில் படகு செய்வதாக கூறப்படுகிறது.
இலைகளை பயன்படுத்தி, ஜப்பான், தைவான் நாடுகளில் தேனீர் தயாரிக்கின்றனர். இளம் இலைகளை, உணவாக வியட்நாம் நாட்டில் பயன்படுத்துகின்றனர்.
சங்க இலக்கியத்தில், வாழைக்கு கதலி என்று பெயர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவகை வாழை, இப்போதும் கதலி என்றே அழைக்கப்படுகிறது. வழிபாடுகளில் படையலுக்கு பயன்படுகிறது.