Thursday 14 March 2019

இருளுக்குள் ஒளியும் நிலவு

தண்டரை, மிகப் பழமையான ஊர். தண்மை உறையும் இடம் என்று பொருள் கொள்ளலாம். செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், குறுங்காடுகளின் ஊடே சற்று உள்ளடங்கி உள்ளது. சிறு குன்றுகளால் சூழ்ந்துள்ளது. இங்கு, 10 ஏக்கர் பரப்பில் இருளர் பழங்குடி இனப் பெண்கள், சிறு காடு உருவாக்கியுள்ளனர். பல்லுயிர் பெருகி நிறையும் காடு. மரங்களும், பறவைகளும் மனதை இதப்படுத்தும். மூலிகை செடிகள் நிறைந்த பண்ணையும்  உள்ளது.
மிக எளிய, இனிய அனுபவத்தை தரும் இடம். இது உருவாகும் போது பலமுறை சென்றுள்ளேன். இருளுக்குள் ஒளிந்திருக்கும் நிலவுகளைக் கண்டுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தண்டரைக்கு... பழங்குடி மக்களுக்கான இதழியல் பற்றி பேசுகிறேன்.   

No comments:

Post a Comment