Tuesday 26 June 2018

திட்டமிடாத சில மணித்துளிகள்...

சில நேரங்களில்...
திட்டமிடாமலே நிகழ்வுகள் உரிய திசையில் நகரும். கடந்த, ஜூன் மாதம், 24 ம் தேதி ஞாயிறு.  அப்படித்தான் நகர்ந்தது. நண்பர் நவமணி, சனியன்று மாலை ஒரு தகவல் அனுப்பினார். சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியில் கட்ட உள்ள வீட்டருகே தோட்டம் அமைக்கும் ஆலோசனை கேட்க அழைத்தார்.
ஞாயிறுக்காக திட்டமிட்டிருந்த பணிகள் நிறைவடைந்தால், மாலை வருவதாக பதில் அனுப்பினேன்.
அன்று, பிற்பகலுக்குள், பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. மாலை, 5:00 மணிக்குள், அய்யப்பன்தாங்கல் வந்துவிடுவதாக தகவல் அனுப்பினேன். புறப்படும் முன்,  முத்துக்குமார் என்பவர், செவ்வெண்டை விதைகள் கேட்டு மெசஞ்சரில் வந்தார். நேரில் பெற்றுக் கொள்வதாக கூறினார்.
வளசரவாக்கத்தில் இருந்த அவரை, ‘நீண்ட துாரம் அலைய வேண்டாம். அய்யப்பன்தாங்கலுக்கு வாருங்கள். விதை எடுத்து வருகிறேன்’ என்றேன்.
முறைப்படுத்தின மாதிரி, 5:00 மணிக்கு அய்யப்பன்தாங்கலில் இருந்தேன். நண்பர் நவமணி வரவேற்று, அழைத்து போனார். சிறிது நேரம் கலந்து உரையாடினோம்.
குறைந்த செலவில், சிரமம் தவிர்த்து, காய்கறி தோட்டம் அமைக்கும் வழிவகைகளை சொன்னேன். மனை உள் வளாகத்திலும், தெருவிலும் சில மரங்களை நடவு செய்ய ஆலோசனை சொன்னேன்
தெருவாசிகளுடன் கலந்து, தெரு ஓரம் நடும் பணியை  முடிவு செய்யச் சொன்னேன். குடும்பத்தில், குழந்தைகள், துணைவியாருடன் கலந்து பேசி, ஆலோசனைகளை செயல்படுத்துவது முறையாக இருக்கும் என்பதையும் உணர்த்தினேன்.
கிட்டத்தட்ட ஒரு கிரவுண்ட் மனையில், வீடு கட்டும் பரப்பளவு நீங்கலாக, ஒளிபடும் இடங்களில் தோட்டம் அமைய உரயைாடல் பயன்பட்டது. அதை முன் மாதிரி தோட்டமாக்கி, அந்த பகுதிவாசிகள் பயன்பெற வகை செய்வதாக நண்பர் வாக்களி்த்தார்.
உரையாடலின் ஊடே, முத்துக்குமாரும் வந்துவிட்டார். செவ்வெண்டை, முட்டை கத்தரி விதைகளை  பரிமாறிக் கொண்டோம். ஞாயிறு மாலை, ஆக்கப்பூர்வமாக உரையாடலுடன் நகர்ந்தது பொழுது. இயற்கை இனிது. 

No comments:

Post a Comment