Thursday 14 March 2019

சில சொற்களும் 52 லட்சம் ரூபாயும்

போலீஸ், குண்டர்கள் வன்முறையால் சமூக பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்த ஊர் சூணாம்பேடு. காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ளது. அங்குள்ள பெண்கள் நிலை பற்றி, தோழர் ஜோதி ஒத்துழைப்புடன், தரவுகளை திரட்டி, 2006 ல் ஒரு கட்டுரை எழுதினேன். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை படித்து, 52 லட்சம் ரூபாய் வரை வளர்ச்சி நிதியாக ஒதுக்கினார்.
அந்த கட்டுரை பற்றி, விசாரித்த பானோஸ் கல்வி நிறுவன பிரதிநிதி, Ms Tungshang Ningreichon என்பவர், Dalit Women Health and Rights Fellowship க்காக விண்ணபிக்க ஆலோசனை சொன்னார். விண்ணப்பித்தேன். டில்லியில் நேர்முகத்தேர்வு நடந்தது. பிரபல Dr. Imrana Qadeer  தலைமையில்,  எழுத்தாளர்கள் Ms. Manimala, Ms. Urvashi Butalia, பத்திரிகையாளர் Ms. Kalpana Sharma, Professor Kancha Illiah ஆகியோர் குழுவாக நேர்முகம் செய்து, தமிழ்நாட்டில் என்னை தேர்வு செய்தனர்.
ஆய்வை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, கட்டுரையை சமர்ப்பித்தேன். டில்லியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், என் கட்டுரையை பாராட்டிய டாக்டர் இம்ரானாவும், ஊர்வசி புட்டாலியாவும், பிரசுரத்துக்கு தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
அதன்பின், நீண்ட நாட்களாக எந்த தொடர்பும் இல்லை. பல பணிகளால் மறந்தும் விட்டேன். கடந்த, 2015 ல், பென்குயின் புக்ஸ் நிறுவனம், இந்த புத்தகத்தை தபாலில் அனுப்பியிருந்தது. தமிழில் எழுதி, ஆங்கிலத்தில் சமர்பித்து, இந்தியில் பிரசுரமாகியுள்ளதை அறிந்தேன். பிரத்யேக கவனத்துடன் வளர்மதி அதை பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இப்போது, வீட்டு சுவருக்கு வண்ணம் பூசும் பணி நடந்த வருகிறது. பொருட்களை மறு சீரமைப்பு செய்து வருகிறோம். அதற்காக புத்தகங்களை கலைத்து போட்டிருந்தோம்.
இந்தி மொழியில் கிடந்த புத்தகம் மகள் கவனத்தை ஈர்க்க வாசித்தவர், அது உருவான அனுபவங்களை கேட்டார். அவருக்கு சொன்னதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
‘பென்குயி்ன் இந்தியா புக்ஸ்’ வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் உள்ள கட்டுரை, சூணாம்பேடு கிராமம் பற்றியது அல்ல. வட தமிழ்நாட்டில் தலித் மற்றும் பழங்குடியின பெண்களின் சுகாதார உரிமை சம்பந்தமான பொது கட்டுரை.
பின் குறிப்பு:
சூணாம்பேடு கட்டுரை வெளியான போது ஆலோசித்த முதல்வர் கருணாநிதிக்கு, மழுப்பலான பதிலை அதிகாரிகள் சொன்னார்களாம். அதை நிராகரித்த முதல்வர், கட்டுரையின் நம்பகத்தன்மையை சுட்டிக்காட்டி கடிந்து கொண்ட தகவலை, ஒரு அரசு செயலாளர்  பகிர்ந்து கொண்டார். நீண்ட உழைப்பை நெகிழ்ச்சியாகவும், கவனமாகவும் திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.
About the book... In Dr Imrana Qadeer’s words, “ Being part of this process has been an enriching experience…This process brought out the complexity of the issue of Dalit women’s health and rights, which requires deep insight and sensitivity towards structural, social, economic, cultural, gender and technological constructs to understand the well-being and collective rights of the most marginalized. For this reason, other than the journalists who were awarded the Fellowships, we decided to invite scholars engaged in Dalit studies or those engaged in evolving a comprehensive vision of health, especially of the marginalized. These scholars agreed readily and were spontaneous in their support. This has helped in creating a thin cloud over the blinding glare of ‘India Shining’ with a silver lining that helps see things otherwise not visible, and contributes towards making better ideological and strategic choices in the future.”

No comments:

Post a Comment